கலைஞர் என்ற பெயர் கருவிலிருந்தே ஒலித்துக் கொண்டிருந்தது… என் தந்தையின் கரகர குரல்வழி… தமிழ்க் காதல்கொண்ட பொறியாளர் அவர். கலைஞர் தமிழால் தீட்டிய கதைகளை பகுத்தறிவு எண்ணங்களை என் தந்தை சொல்ல அதைக் கேட்ட இரட்டை பின்னல் நாட்கள்… மின்னலாய் கண்முன். என் வாழ்க்கையின் திருப்புமுனைகள் அவரால் அமையும்…